கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 18 - 45 வயது நிரம்பியவர்களுக்கான தடுப்பூசி போடும் முகாம்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்களின் வழிகாட்டுதல்படி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மாவட்டத்தில் உள்ள களக்காடு மற்றும் சேரன்மகாதேவி வட்டாரத்தில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
களக்காடு பெரிய தெருவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.பிரியதர்ஷனி அறிவுரைப்படி, நடமாடும் மருத்துவ குழுவின் சார்பில், டாக்டர்.பீர்முகைதீன் தலைமையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி திறந்த வெளியில் வைத்து நடைபெற்றது.
இதேபோல சேரன்மகாதேவி நகர பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் வைத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் சேரன்மகாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் காதர், டாக்டர் ஜேம்ஸ், கோவிட் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த தாசில்தார் பார்கவி தங்கம், மண்டல துணை தாசில்தார் மகாராஜன், சுகாதார ஆய்வாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாம்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.