Logo of Tirunelveli Today

நெல்லை மாவட்டத்தில் உள்ள 4.59 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம்!

June 12, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு நிவாரணமாக ரூபாய் 4000 நிதி உதவியும், 14 பொருட்கள் கொண்ட பொருட்கள் தொகுப்பு வழங்குவதாகவும்  அறிவித்திருந்தது. இதன்படி முதற்கட்டமாக ரூபாய் 2000 சென்ற மாதம் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக ரூபாய் 2000 நிவாரணத் தொகையும், 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வரும் 15/06/2021 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் எனவும் அதற்குரிய டோக்கன் வீடுகளுக்கே வந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 59 ஆயிரத்து 538 அரிசி கார்டுகளுக்கு நேற்று முதல் நிவாரண பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி பொது மக்கள் வரும் 15/06/2021 ஆம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify