Logo of Tirunelveli Today

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் சிகிச்சை மையங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள புதிய இணையதளம் தொடக்கம்.

May 18, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி எங்கே சென்று போட்டுக்கொள்ளலாம் என்றும் கொரோனா சிகிச்சை அளிக்கும் மையங்களின் விவரங்களையும் எளிதில் தெரிந்து கொள்ள உதவும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் சார்பாக புதிய இணையதள பக்கம் துவங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட மக்கள் https://covidcaretirunelveli.in/ என்ற இணையதள முகவரியில் மேற்கண்ட தகவல்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதள பக்கத்தில் தடுப்பூசி போடும் மையங்களின் விவரம் ,மாதிரி சேமிப்பு மையங்களின் விவரம், பரிசோதனை மையங்களின் விவரம், சிகிச்சை மையங்களின் விவரம் மற்றும்  கோவிட் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் உள்ளது. இந்த இணையதளத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம் என்றும் பொதுமக்கள் இந்த இணையதள பக்கத்தை பயன்படுத்தி கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும்  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify