Logo of Tirunelveli Today

நெல்லை மாநகரில் நடமாடும் வாகனங்கள் மூலம் 480 டன் காய்கறிகள் விற்பனை

May 29, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை சேவை தொடங்கப்பட்டது.

தினமும் அத்தியாவசியமாக தேவைப்படும் காய்கறி பொருட்களை வீடு தேடி சென்று விற்பனை செய்யும் வகையில் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாளையங்கோட்டை மண்டலத்தில் 122, மேலப்பாளையத்தில் 120, நெல்லை மண்டலத்தில் 57, தச்சநல்லூர் மண்டலத்தில் 40 என மொத்தம் 339 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெல்லை மாநகரில் இதுவரை 480 டன் அளவுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும், மேலும் 4 சக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள் செல்ல முடியாத குறுகலான சந்து பகுதிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை செய்யும் சேவையும், கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify