Logo of Tirunelveli Today

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் 2000 கபசுர குடிநீர் பொட்டலங்கள் விநியோகம்.

May 20, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் கொரோனா நோய்த் தொற்றை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் சுமார் 2 ஆயிரம் நபர்களுக்கு கபசுர குடிநீர் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பாளையங்கோட்டை, சமாதானபுரம், முனிசிபல் காலனி, காமராஜ் நகர், டாக்டர் அம்பேத்கர் நகர்  மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சுமார் இரண்டாயிரம் நபர்களுக்கு கபசுர குடிநீர் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சியை திருநெல்வேலி மாநகராட்சி, சேவா பாரதி மற்றும் பாரதி சேவா கேந்திரம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தியது.

இதில் பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் பிரேம் ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பொட்டலங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் நடராஜன், நெல்லை சேவா பாரதி மற்றும் பாரதி சேவா கேந்திரம் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify