Logo of Tirunelveli Today

நெல்லை கொக்கரகுளத்தி அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

May 25, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி குறிப்புகள்:

  • மே 27ஆம் தேதி நெல்லையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
  • நடைபெறும் இடம் - தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகம்

வாழ்வில் ஒளி பிறக்கும் என நம்பிக்கையோடு வேலை தேடும் இளைஞர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய வகையில் வேலைவாய்ப்பு முகாம்..

மே - 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருநெல்வேலி கொக்கரகுளத்தி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புகிறவர்கள் தங்களுடைய கல்வி மற்றும் இதர சான்றுகளை கொண்டு வருவது அவசியம், என்று மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக உதவி இயக்குனர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.

வேலை தேடுபவர்களும் வேலை வாய்ப்பளிக்க விரும்பும் தனியார் நிறுவனங்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த முகாம் மூலம் பணி நியமனம் பெரும் பதிவுதாரர்களின் அரசு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு “நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ்” என்னும் டெலிகிராம் சேனலில் கேட்டு தகவலை தெரிந்து கொள்ளலாம் என்றும் உதவி இயக்குனர் பேச்சியம்மாள் தெரிவித்தார்.

நல்ல பணி அமைந்து நலம் யாவும் பெற்று இளைய சமுதாயம் தங்கள் பணியில் மேலும் சிறப்பு பெற்று முன்னேற , திருநெல்வேலி டுடே வாழ்த்து தெரிவிக்கின்றது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify