செய்தி குறிப்புகள்:
- களக்காடு நாடார் புதுதெரு முப்பிடாதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது
- சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு வருஷாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தியதில் அவ்வூர்மக்கள் மகிழ்ச்சி
திருநெல்வேலி களக்காடு நாடார் புது தெரு முப்பிடாதி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா மிகசிறப்பாக நடைபெற்றது.
வாழ்க்கையில் தன்னை நாடிவரும் பக்தர்களை அன்போடு அரவணைப்பவள். துன்பத்தோடு ஓடிவரும் மக்களை துயர் தீர்த்து காப்பவள். தூய மனதோடு தம்மை நினைக்கும் அனைவருக்கும் குளிர்ச்சியான வாழ்வுதனை தருபவள் வேண்டும் வரமனைத்தும் கொடுத்து விரும்பிய வாழ்வுதனை அளிப்பவள் அவளுக்கு வருஷாபிஷேக விழா நடைபெற , மக்கள் பக்தி பெருக்கோடு அம்மனை சென்று தரிசனம் செய்தனர்.
சிறப்பு யாகசாலை அமைத்து முறையான மந்திரங்களுடன் பூஜைகள் நடத்தப்பட்டன .
தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கும்பங்களுடன் 'ஓம் நமச்சிவாயா ' என்று கோஷமிட்டவாறு பதிகங்கள் பாடி சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வந்தனர்.
கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. வருஷாபிஷேக விழா ஐதீக முறைப்படி மிக சிறப்பாக நடைபெற்றது.
முப்பிடாதி அம்மன், சுடலை மாடன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது . மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.