Logo of Tirunelveli Today

நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் இணையதளம் மூலம் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்!

June 10, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி ஆகியவை இணைந்து ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை இணையதளம் வாயிலாக நடத்த உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பு அருங்காட்சியகமும், அரும்பணிகளும் என்ற தலைப்பில் நாளை 11/06/2021 ஆம் தேதி அன்று தொடங்கி வரும் 17/06/2021 ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. இதில் வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். ஏழு நாட்கள் இணையதளம் மூலம் நடைபெறும் இந்த பயிற்சியில் தொடர்ந்து பங்குபெறும் நபர்களுக்கு மின் சான்றிதழ்  (E-Certificate) வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9444973246, 9865409524.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify