Logo of Tirunelveli Today

நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக இலை ஓவிய கலை பயிற்சி.

May 20, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலியில் உள்ள அரசு அருங்காட்சியகம் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று இலவச கலை பயிற்சி வகுப்புகளை என்.பி.என்.கே கலை பண்பாட்டு மையத்துடன் இணைந்து இணையதளம் மூலம் நடத்தி வருகிறது. இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் வீட்டில் இருந்தபடியே பயிற்சி வகுப்பில் பங்கு பெற்று பயன் பெறலாம்.

இந்த வாரம் வியாழக்கிழமையான இன்று மாலை 3.00 மணிக்கு “இலையில் ஓவியம் செய்யும் கலை பயிற்சி” வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விருப்பம் உள்ள அனைத்து தரப்பினரும்,  ஜூம் செயலி எண்:  8740995990 , கடவுச்சொல்: 333543 ஆகியவற்றை பயன்படுத்தி இணையதள பக்கத்தில் இணைந்து கலந்து கொள்ளலாம். இது பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள 9444973246  என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அரசு அருங்காட்சியகம் சார்பாக  தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify