Logo of Tirunelveli Today

நெல்லையில் 11 மையங்களில் நீட் தேர்வு நாளை ஆரம்பம்

July 16, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • நெல்லையில் மாணவர்களுக்கான நீட் தேர்வு 11 மையங்களில் நாளை முதல் நடைபெறவிருக்கிறது
  • தென்காசி மாவட்டத்தில் ஒரு மையத்தில் இடைத்தேர்வு நடைபெறுகிறது.

தேசிய அளவில், பொது மருத்துவம் பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் நேஷனல் எளிஜிபிலிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட் (National Eligibility Entrance Test ) என்ற தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 2013 மே 5ம் தேதி முதல் வருடந்தோறும் நடத்தப்படுகிறது. . கடந்த 2019ம் ஆண்டு முதல் நீட் தேர்வை தேசிய தேர்வு முகாம் நடத்தி வருகிறது

மருத்துவம் மற்றும் பல மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு வரும் தேசிய தேர்வு முகமையால் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது

நெல்லையில் இந்த வருடத்திற்கான நீட் தேர்வு 11 மையங்களில் நாளை நடைபெறவிருக்கிறது .தென்காசி மாவட்டத்தில் ஒரு மையத்தில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

நீட் தேர்வுக்கான நேரம்; ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு முதல் மாலை 5:20 மணி வரை.

திருநெல்வேலி மாவட்டத்தில் விஜய நாராயணம் கேந்திரிய வித்யாலயா
ஐ.என்.எஸ் வண்ணாரப்பேட்டை,, பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, வடக்கன்குளம் எஸ் ஏ வி பாலகிருஷ்ணாமேல்நிலைப்பள்ளி, தியாகராஜ நகர் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி , சீதபட்ப நல்லூர் ஐன்ஸ்டீஸ் கலை அறிவியல் கல்லூரி , தாழையூத்து மகாராஜா நகர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் நீட் தேர்வு நடைபெறுகின்றது

அதனோடு சேரன்மகாதேவி ஸ்கார்ட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி , தியாகராஜ நகர் புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாழையூத்து ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மேட்ரிக் மேல்நிலைப்பள்ளி , பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, திசையன்விலைஇன்டர்நேஷனல் பள்ளி என ஆகிய மொத்தம் 11 மையங்களில் நடைபெற இருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் சங்கரன் கோயில் பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கான நீட் தேர்வு இந்த மையத்திலும் நடைபெறுகிறது.

Image source: instanews

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify