Logo of Tirunelveli Today

நகர பஞ்சாயத்து சார்பில் 18 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு தேசியக்கொடி

August 13, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • இந்தியாவில் 75 வது சுதந்திர தினத்தை ஒட்டி நாடு முழுவதும் சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
  • நகர பஞ்சாயத்து சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டமாக பொதுமக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி வழங்கப்பட்டது.

இந்தியாவில் 75 வது சுதந்திர தினத்தை ஒட்டி நாடு முழுவதும் சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது

நகர பஞ்சாயத்து சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டமாக பொதுமக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நகர பஞ்சாயத்து சார்பில் 18 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது
.
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது ‌ இந்த சுதந்திர தினத்தை அமுதப் பெருவிழாவாக கொண்டாடுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி இன்று முதல் நாளை மறுநாள் வரை அனைவரும் தங்கள் வீடுகளில் மற்றும் பொது இடங்களில் தேசியக் கொடியில் பறக்க விடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது .

வள்ளியூரில் 18 வார்டுகளிலும் உள்ள வீடுகளில் கொடி ஏற்றுவதற்காக சுமார் 10,000 தேசியக்கொடிகளை பொதுமக்களுக்கு அரசு பஞ்சாயத்து சார்பில் வழங்கப்பட்டது.

நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சுஷ்மா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நகர பஞ்சாயத்து தலைவி ராதா ராதாகிருஷ்ணன் தேசிய கொடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், துணைத் தலைவர் கண்ணன், சுகாதார மேற்பார்வையாளர் டேனியல் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும், உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Image source: maalaimalar.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify