Logo of Tirunelveli Today

நெல்லை தலையிடமாக கொண்டு தீயணைப்பு மண்டலம் டி.ஜி.பி தகவல்

August 27, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி குறிப்புகள்

  • டி. ஜி. பி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் டி.ஜி.பி . பி.கே.ரவி நேற்று நெல்லைக்கு வந்தார்.
  • ராதாபுரம் மானூரில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என டிஜிபி .பி. கே ரவி அறிவித்தார்.

திருநெல்லை மாவட்டம் நெல்லையை தலையிடமாகக் கொண்டு தீயணைப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் டி.ஜி.பி பி. கே ரவி கூறினார்.

டி. ஜி. பி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் டி.ஜி.பி . பி.கே.ரவி நேற்று நெல்லைக்கு வந்தார்.

அங்கே மருதகுளத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் தீயணைப்பு தற்காலிக பயிற்சி மையத்திற்கு சென்றார் . அங்கு பயிற்சி பெற்று வரும் 145 வீரர்களை சந்தித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள் வசதிகள் குறித்தும் பார்வையிட்டார

தொடர்ந்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகம் முன்பு மரக்கன்று நாட்டினார் . மேலும் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

அப்போது தென் மண்டல தீயணைப்பு துறை இணை இயக்குனர் விஜயகுமார் , உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள், நெல்லை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கணேசன் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் ஆகியோ கலந்து கொண்டனர்

டி.ஜி. பி .பி கே ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொழுது பேசியதாவது;

தமிழகம் முழுவதும் ஒன்பது இடங்களில் தீயணைப்பு துறை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 1600 புதிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி வருகிற ஆறாம் தேதி முடிவடைகிறது. பயிற்சி அளிப்பதற்கு சிறந்த மையமாக நெல்லை உள்ளது. தற்போது பயிற்சி நிறைவடைந்த உடன் அவர்கள் காலி பணியிடங்களை நிரப்பப்படுவார்கள்.

புதிதாக 5 தீயணைப்பு நிலையங்கள் அமைய உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மானூர் மற்றும் ராதாபுரம் ஆகிய இடங்களில் தீயமைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று டி.ஜி.பி. பி.கே ரவி கூறினார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify