Logo of Tirunelveli Today

அரியகுளத்தில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

July 1, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • அரியகுளம் சாரதா கல்லூரியில் உயர் கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நான் முதல்வன் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி,சாரதா மகளிர் கல்லூரியில் ஜூலை -1 . வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நான் முதல்வன், திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவியருக்காக உயர் கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, அறியகுளம் சாரதா மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ஜூலை -1 காலை 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.

தாங்கள் விரும்பும் கல்லூரியை பள்ளி மாணவ மாணவியர் தேர்ந்தெடுத்து படிப்பதற்கு உதவும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழக முதல்வரின் நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற தலைப்பில் உயர் கல்விக்கான அமைப்பு திட்டம் என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறினார்

தமிழக சட்டப்பேரவை தலைவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ் . ராஜ கண்ணப்பன் நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் ,மாநகராட்சி துணை மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மருத்துவம் வணிகவியல் மற்றும் பொறியியல் கல்லூரி, அறிவியல் போன்ற உயர்கல்வி படிப்புகள் மற்றும் அதனைச் சார்ந்த முக்கிய வாய்ப்புகள் சம்பந்தமாகவும் மாணவ மாணவியரின் அனைத்து வித சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் விதத்திலும் இந்த நிகழ்ச்சி அமையும் என்பதால் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

.கலை அறிவியல் மற்றும் வணிக படிப்புகள் குறித்து துறை வல்லுனர்களும் , பொறியியல் படிப்பு குறித்து ஐஐடி பேராசிரியர்களும் பள்ளி மாணவ மாணவியரிடையே உரையாற்றுகின்றனர்.

தமிழகம் மற்றும் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பல்வேறு கல்லூரிகள் அதன் முக்கிய புதிய பாடத்திட்டங்கள், அதில் சேர்வதற்கான தகுதிகள் போன்ற அனைத்து விவரங்களையும் மாணவ மாணவியர் நேரடியாக பெற்று பயன்பெறலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றும் கலெக்டர் விஷ்ணு அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தலைவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ் . ராஜ கண்ணப்பன் நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் ,மாநகராட்சி துணை மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நேரில் கலந்து கொள்ளாதவர், நிகழ்ச்சியின் நேரலையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் யூடியூப் சேனலில் பார்த்து பயனடையுங்கள் என்று திருநெல்வேலி டுடே தெரிவித்துக் கொள்கிறது.

Image source: dinamani.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify