Logo of Tirunelveli Today

நாளை வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு பிறந்தநாள்

June 11, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

12 6 2022 ஞாயிற்றுக்கிழமை வடிவேல் எனக்கு பிறந்தநாள் மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் எம்பெருமான் முருகன் அவதரித்த திருநாள் அந்நாளிலே விரதம் இருக்கும் முறை பற்றி பார்ப்போம்.

1- நம்முடைய காரியம் ஜெயம் ஆக முருகனை வேண்டிகொண்டு விடிகாலை எழுந்து-ஸ்நானம் முடிந்தவுடன் ஆலயம் சென்று அர்ச்சனை வழிபாடுகளோடு ஆரம்பித்தல் சிறப்பு.

2 - விநாயக பெருமானை வேண்டி அதன் பிறகே நாம் விரதம் இருப்பதற்கான எம்பெருமான் முருகனை வேண்டுதல் மிக சிறப்பு. .

3‌- நெற்றியிலே விபூதி குங்குமம் அல்லது சந்தனம் என குளிர்ந்து நிறைந்து இருத்தல் விரதத்திற்கு உரிய தனிச்சிறப்பு .

4 - காலை மாலை விளக்கேற்றி முருகனின் புகழ் பாடி -கந்தபுராணம் கந்த சஷ்டி மனமுருகி மெய் கனிந்து படித்தல் விரதத்திற்கு சிறப்பு.

5 - முருகனையே நினைத்து காலை உணவை தவிர்த்து மதியம் ஒருவேளை உணவு உண்டு இரவில் பால் பழம் என அல்லது டிபன் எடுத்துக்கொள்வது முறையான விரதம் இருப்பதற்கான சிறப்பு .

6 - விரதம் இருக்கும் பொழுது கோபப்படுதல், தவறாக பேசுதல் கூடாது முடிந்தவரை மௌன விரதம் இருந்து அவசியத்திற்கு மட்டுமே பேசுவது என்பது விரதத்திற்கே சிறப்பு.

இப்படி முறையாக விரதத்தை முறையாக எடுத்துக்கொண்டு ,நாம் ஒரு வேண்டுதலை இறைவனிடம் வைத்தால் அளவில்லாத ஆனந்தம் கொண்டு கந்தன் கடம்பன் கதிர்வேலன் முருகன் என அன்போடு அழைக்கப்படும் மயில் மீது அமர்ந்திருக்கும் எம்பெருமான் குமரனவன் பலனை இனிதே நிறைவேற்றி வாழ்க்கையில் ஒளியேற்றி கவலையெல்லாம் நீக்கி அருள்புரிவான்.

வைகாசி விசாகத்தன்று முருகனையே நினைத்து ‌மனதை ஒரு நிலைப்படுத்தி, உபவாசம் இருந்து, சிந்தை தெளிவாகி ஒழுக்க அறநெறிகள் தான் கொண்டு வாழ்வோம். இம்மை மறுமையிலும் இறை அருள் பெற்று இனிதாக வாழ்ந்து நம்முடைய வாழ்வின் பிறவிப்பயனை இனிதே பூர்த்தி செய்து நிறைவு காண்போம்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify