Logo of Tirunelveli Today

தமிழ் மன்றம் சார்பில் முத்தமிழ் விழா

July 8, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லூரியில் ஆராய்ச்சி நிலையத்தில் முத்தமிழ் விழா
  • கல்லூரி முதல்வர் பழனிசாமி பழனிசாமி தலைமை வகித்து உரையாற்றினார்.

'தமிழ் மொழியினும் இனிதான மொழி வேறு எங்கும் உள்ளதோ; என்பது நாம் அறிந்த விஷயம். தமிழ் மொழியை உலகத்திற்கு எடுத்துக்காட்ட அடிக்கடி முத்தமிழ் மன்றங்கள் நடப்பதும் உண்டு. பத்திரிக்கைகள் மூலமாக நற்செய்திகள் பல இடத்தில் பரவி மக்கள் செவி பட இனிது பெறுவதும் உண்டு. அப்படிப்பட்ட செய்தியாக இன்று நாம் அறியக் கூடிய செய்தி..

திருநெல்வேலி தமிழ் மன்றம் கலை மற்றும் சார்பில் முத்தமிழ் விழா கால்நடை மருத்துவ கல்லூரியில் ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முத்தமிழ் விழாவில் கல்லூரி முதல்வர் பழனிசாமி தலைமை வகித்து உரையாற்றினார்.

ஜானகி அம்மாள் , சிவகாமி அய்ய நாடார், கல்லூரி முன்னாள் ஆங்கிலத் துறை தலைவர் சிவகாமி , மு ராமச்சந்திரன்ஆகியோர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு 'பொருனை தமிழ் மன்ற மாணவர்' இதழை வெளியிட்டு பரிசுகள் வழங்கினார்கள்.

எழுத்தாளர் இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை ஆற்ற, தமிழ் மன்ற செயலாளர் மா சுந்தர விநாயகி அறிக்கைதனை சமர்ப்பித்தார்.

சிறந்த சொற்பொழிவிற்கு சேரன் நினைவு தமிழ் அன்றும், என்றும் என்ற தலைப்பில் தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதினை இரண்டாம் ஆண்டு மாணவி பாரதிதேவி பெற்றார்.

தமிழ் யாதுமானவள் என்ற கவிதைக்கான பரிசு , மூன்றாம் ஆண்டு மாணவர் அர்ஜுனுக்கு அளிக்கப்பட்டது

கலை மன்ற செயலாளர் த. அண்ணா வரவேற்புரை ஆற்ற தமிழ் மன்ற மாணவர் செயலர் ச. தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார் . இதற்கான ஏற்பாடுகளை தமிழ் மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மொழியின் சிறப்பினை மேலும் வெளிக்கொணர்ந்து கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் மாறாத சமுதாயமாக உருவாக்குவோம் என்று திருநெல்வேலி டுடே செய்திதனை முன்மொழிகின்றது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify