Logo of Tirunelveli Today

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய திருநெல்வேலி மாநகரம்.

May 3, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கொரோனா இரண்டாம் அலை நோய் தொற்று வேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் நேற்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். திருநெல்வேலி மாநகரத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடைப்பிடிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக நேற்று மாநகரில் உள்ள நயினார்குளம் மார்க்கெட், திருநெல்வேலி டவுன் மார்க்கெட், தற்காலிக மார்க்கெட், பாளையங்கோட்டை மார்க்கெட், உழவர் சந்தை, வணிக வளாகங்கள், உணவு கூடங்கள், ஜவுளி நிறுவனங்கள், டீ கடைகள் என அனைத்து பெருவாரியான கடைகள் மற்றும் மார்கெட்களும் அடைக்கப்பட்டன.

மாநகரில் ஆங்காங்கே அத்தியாவசிய தேவைகளுக்கு உதவும் வகையில் மருந்து கடைகள், பால் கடைகள், பெட்ரோல் பங்குகள் மட்டும் திறந்திருந்தன. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருந்ததால் மாநகர் முழுவதும் போக்குவரத்து இன்றி அமைதியாக காணப்பட்டது. குறிப்பாக அதிகமான போக்குவரத்து நெரிசலை கொண்ட பகுதிகளான வண்ணாரப்பேட்டை சந்திப்பு, முருகன்குறிச்சி சாலை, பாளையங்கோட்டை சந்திப்பு, கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம், சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம், திருநெல்வேலி டவுன் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை மற்றும் மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி இருந்தது.

ஊரடங்கை முழுமையாக கண்காணித்து வந்த மாநகர காவல் துறையினர், காரணம் இல்லாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த நபர்களை பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பியும், மாஸ்க் அணியாமல் வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதித்தும் தங்கள் பணியை செய்தனர். மாநகரில் நேற்று அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. திருநெல்வேலி மாநகர் மட்டும் அல்லாது மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய பகுதிகளிலும் ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify