Logo of Tirunelveli Today

ஹயக்ரீவர் கல்வி நிறுவனம் சாரதா மகளிர் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

August 22, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரியில் சார்பில் தரமான கல்வியை மாணவர்களுக்கு எடுத்து உரைப்பது எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • சாரதா மகளிர் கல்லூரி மற்றும் ஹயக்ரீவர் கல்வி நிறுவனம் தச்சநல்லூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

நெல்லை மாவட்டம் அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி மற்றும் சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரியில் சார்பில் தரமான கல்வியை மாணவர்களுக்கு எடுத்து உரைப்பது எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாரதா மகளிர் கல்லூரி மற்றும் ஹயக்ரீவர் கல்வி நிறுவனம் தச்சநல்லூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

இந்த விழாவில் கல்லூரி துணை முதல்வர் கலாவதி வரவேற்புரை நிகழ்த்தினார். செயலர் யதிஷ்வரி சரவணாபவபிரியா அம்பா முன்னிலை வகித்தார் . கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் தொடக்க உரையாற்ற, கல்வி மேம்பாட்டு கேந்திரத்தின் தமிழ் மாநில தலைவர் இந்திராணி சிறப்பு விருந்தினர்களை வரவேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் லஷ்மி கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர் வின்சென்ட் ராஜசேகர் சிறப்புரை ஆற்றினார். விழாவின் முக்கிய நிகழ்வாக மகளிர் கல்வியியல் கல்லூரி இடையே முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்த பத்திரத்தை கல்லூரி செயலரிடமிருந்து சாரதா கல்வியல் கல்லூரி பேராசிரியர் சாருலதா பெற்றுக் கொண்டார். அடுத்து ஹயக்ரீவர் கல்வி நிறுவனம் தச்சநல்லூர் மற்றும் சாரதா மகளிர் கல்லூரிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது . ராமநாதபுரம் சி.எஸ். ஐ கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆனந்த் நன்றி கூற விழா சிறப்பாக நடைபெற்றது.

Image source: maalaimalar.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify