Logo of Tirunelveli Today

மின்சார வாரிய தொழிற்சங்கங்கள் நெல்லையில் கண்டன போராட்டம்

June 8, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்தி குறிப்புகள் :

  • நெல்லையில் மின்சார வாரிய தொழிற்சங்கங்கள் சேர்ந்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மின் வாரிய மண்டல அலுவலகம் முன்பு போராட்டம்.
  • ஊதிய உயர்வு மற்றும் 52000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி போராட்டம்

மக்கள் தங்கள் குறைகளை சொல்வதற்கு போராட்டம் ஒன்றே தீர்வு எனும் நிலைதான் அன்றைய சுதந்திர காலத்தில் இருந்து இன்றைய நிலைமை வரை தொடரத்தான் செய்கின்றது.

நெல்லை மாவட்டத்தில் மின் வாரிய மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மண்டல செயலாளர் பீர் முகமது ஷா தலைமை ஏற்றார்.‌ பொதுச்செயலாளர் சாலமோன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் .

பஞ்சப்படி உள்ளிட்ட 23 சலுகைகளை பறிக்கும் பாரிய ஆணையை ரத்துசெய்ய வேண்டும் .2-12-2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது.

மேலும் 3% பஞ்சபடியை உடனடியாக வழங்கிட வேண்டும் . மின் வாரியத்தில் காலியாக உள்ள 52000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை முழங்கினர்.

கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் குழுக்கள் சேர்ந்து நடத்தும் நியாயமான இந்த தற்போதைய போராட்டங்கள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்று நாமும் எதிர்பார்ப்போம்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify