Logo of Tirunelveli Today

மேயர் சரவணன் தலைமையில் நகர அமைப்பு நிலை குழு கூட்டம்

August 27, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி குறிப்புகள்

  • நெல்லையில் மேயர் சரவணன் தலைமையில் நகர அமைப்பு நிலை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது .
  • அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருக்கும் கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேயர் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் மேயர் பி. எம். சரவணன் தலைமையில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு நிலை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்பு பி. எம் . சரவணன் பேசியதாவது;

நெல்லை மாநகர பகுதிக்கு உட்பட்ட ஆஸ்பத்திரிகள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருந்தால் அந்த கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சிக்குட்பட்ட இடங்களை கண்டறிந்து அங்கே அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள், பொது இடங்களை முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

கழிவுநீர் ஓடைகளில் மழைநீர் எங்கும் சேர்ந்து நிற்காமல் சீராக போகும் வகையில் கட்டிட உரிமையாளர்கள் தாமாக முன்வந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மாநகர சட்ட பகுதி மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி சாலை விரிவுபடுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று‌ பி.எம் சரவணன் கூறினார்.

துணை மேயர் கே . ஆர். ராஜு தலைமை வகிக்க , நகரமைப்பு நிலை குழு உறுப்பினர்கள் மற்றும் நகரமைப்பு நிலை குழு தலைவர் சங்கீதா ,மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, வெங்கட்ராமன் ,இளநிலை உதவி செயற்பொறியாளர் ராமசாமி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify