நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த மேளநத்தத்தில் அருந்த பசு அம்மன் கோவில் கொடை விழா செவ்வாய்க்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது
மேலநத்தம் கிராமத்தில் உள்ள அருந்த பசு அம்மன் கோவிலில் கடந்த மே 13 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது . ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தன.
இதன் கொடை விழா கடந்த திங்கட்கிழமை மாலை சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கி திருவிழாவில் இரவு அம்மனுக்கு மாகாப்பு தீபாராதனை மற்றும் நள்ளிரவில் சிறப்பு தீபாராதனை ஆகியவையும் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமமென , பால்குட வீதி உலா சிறப்பு அபிஷேகம் என மதியக்கொடை தீபாராதனையும் நடைபெற்றது.
மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து கிரக குடம் எடுத்தல், பொங்கல் இடுதல் ,இரவு முளைப்பாரி ஊர்வலம் அலங்கார தீபாராதனை அனைத்தும் மங்களகரமாய் நடைபெற்றது.
இரவு ஐதீக முறைப்படி 10 மணிக்கு மது பொங்க வைத்தலும், நள்ளிரவில் படையல் தீபாராதனையும் நடைபெற பக்தர்கள் பக்தி பரவசத்தோடு கண்டுகளித்தனர்.
இதனை தொடர்ந்துமின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் அழகிய கோலத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி , சப்பரத்தில் வீதி உலா வரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் விழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
Image source: Dinamalar