செய்திக்குறிப்புக்கள்:
- அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து துவங்க உள்ள மாரத்தான் போட்டி.
- வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், நள்சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
திருநெல்வேலியில் வருகிற 15/03/2022 அன்று மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. விஷ்ணு அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் மார்ச்-15 அன்று ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என தனித்தனியாக பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து காலை 7.00 மணிக்கு துவங்க உள்ள மாரத்தான் போட்டியில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெறலாம் எனவும், போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் பிரிவில் முதல் மூன்று நபர்களுக்கும், பெண்கள் பிரிவில் முதல் மூன்று நபர்களுக்கும் பரிசுகளும், நற்சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அண்ணா விளையாட்டு அரங்கில் துவங்கும் இந்த போட்டியானது அரசு மருத்துவமனை சாலை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை சாலை, சீனிவாச நகர் புறவழிச்சாலை பாலம் வரை சென்று மீண்டும் அதே வழியாக திரும்பி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Image source: racemart.in

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.