செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளில் மேலாண்மை கூட்டம்.
- பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பள்ளிகள், நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 482 அரசு பள்ளிகளிலும் நேற்று மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களும், மேலாண்மை குழுவினரும் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்து பேசினார்கள்.
திருநெல்வேலி டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கி, பள்ளியின் செயல்பாடுகள், செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தல், பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகளை மேலாண்மை குழுவினர் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
Image source: dailythanthi.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.