செய்திக்குறிப்புகள்:
- மகாசிவராத்திரியை ஓட்டி நான்கு கால வழிபாடுகள்.
- திருக்கோவில் நடைகள் இரவு முழுவதும் திறந்திருக்கும்.
திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி சிவாலயமான நெல்லையப்பர் திருக்கோவிலில் வரும் அன்று மகாசிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அன்று இரவு முழுவதும் திருக்கோவில்கள் நடைகள் திறந்து வைக்கப்பட்டு நான்கு கால வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும்.
திருக்கோவிலுக்குள் உள்ள திருமூலமகாலிங்கம், சுவாமி நெல்லையப்பர், சகஸ்ரலிங்கம், வாயு லிங்கம், குபேரலிங்கம், சிவசைலப்பர், அனவரதலிங்கம், சங்கரலிங்கம், சொக்கநாதர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய அலங்கார தீபாராதனை உடன் நான்கு கால வழிபாடுகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு கால பூஜையிலும் பிரதோஷ நாயகர் வெள்ளி விடை வாகனத்தில் எழுந்தருளி கோவில் பிராகாரங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.