Logo of Tirunelveli Today

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை! அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

June 7, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தென்மேற்கு பருவ மழை காலம் துவங்கியதை ஒட்டி கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் இந்த  அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், களக்காடு, மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் பரவலாக மழை பெய்தது. நேற்றைய நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 134.50 அடியாக இருந்த நிலையில், அணைக்கு 888.13 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.1,292.25 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 87.70 அடியாக இருந்த நிலையில், அணைக்கு வினாடிக்கு 155 கனஅடி தண்ணீர் வருகிறது. 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

156 அடி முழுக்கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 140.48 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.

இது தவிர மாவட்டத்தில் உள்ள வடக்கு பச்சையாறு அணை 39.70 அடியாகவும், நம்பியாறு  அணை 12.43 அடியாகவும், கொடுமுடியாறு 28 அடியாகவும், கடனா அணை 74 அடியாகவும், ராமநதி 64 அடியாகவும், கருப்பாநதி 59.77 அடியாகவும் உள்ளது. தென்மேற்கு பருவ மழை மேலும் தீவிரமடையும் நிலையில் அணைகளுக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிய வருகிறது!

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify