தென்மேற்கு பருவ மழைக்காலம் துவங்கிய நிலையில் தற்போது தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழத் துவங்கி உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் குறிப்பிட்ட பருவத்தில் குற்றாலம் சீசன் துவங்கியுள்ளதால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்ற வருடமும் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்த வருடமாவது அருவிகளில் குளிக்க அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் உள்ளம் கவர்ந்த குற்றாலத்தில் இந்த வருடம் மிகச்சரியாக ஜூன் மாத துவக்கத்தில் சீசன் துவங்கி உள்ள நிலையில், குற்றாலம் பகுதியில் இதமான தென்றல் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் குற்றாலத்தில் உள்ள பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் நன்றாக தண்ணீர் விழத்துவங்கி உள்ள நிலையில், இவ்வருட குற்றால சீசன் இனிதே துவங்கியுள்ளது!

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.