Logo of Tirunelveli Today

குடிநீர் சீராக வழங்கக் கோரி கொடுக்கப்பட்ட மனுவை மேயர் ஏற்பு

June 2, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக் குறிப்புகள் :

  • நெல்லை மாநகர அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
  • ஐக்கிய பேரவை தலைவர் மாரியப்பன் தலைமையில் அளித்த கோரிக்கை மனுவை மேயர் ஏவிஎம் சரவணன் ஏற்பு

நெல்லை மாநகர அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பணியிட மாற்ற வால்வு ஆப்ரேட்டர்கள் மீண்டும் அதே இடத்தில் நியமனம் செய்து 4 மண்டலங்களிலும் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவை தலைவர் மாரியப்பன் தலைமையில் மனு கொடுத்தனர். மாநகர நல அலுவலர் ராஜேந்திரன் செயற்பொறியாளர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

"நெல்லை மாநகராட்சி 4 மண்டலங்களிலும் வால்யு ஆப்ரேட்டர்கள் ஆக பணியாற்றி வருகிறோம். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பணிமாற்றம் செய்யப்பட்ட 42 ஆபரேட்டர்களை மீண்டும் அதேஇடங்களுக்கு பணி மாற்றம் செய்து குடிநீர் வினியோகம் சீராக நடக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர்.

மஸ்ஜீத் மாலீக் அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் ' பாளையங்கோட்டை கோட்டூர் வார்டு ஈ எண் 8-ல் பஜனைமடம் பகுதியில் பாளையங்கால்வாய் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு அழிக்கப்படுவதை தடுத்து , உடனுக்குடன் குப்பையை அப்புறப்படுத்தி மக்களுக்கு கண்ணெரிச்சல் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களில் எரிந்து காக்க வேண்டும்."

கவுன்சிலர் கந்தன் கொடுத்த மனுவில் வண்ணாரப்பேட்டை ஜவுளிக்கடை , பெட்ரோல் பங்க் எதிரே செயல்பட்டு வந்த பஸ் நிறுத்தங்களில் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும்

படித்துறை சலவைத் தொழிலாளிகள் சாரபில் கருப்பந்துறையில் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள 2வது,3வது தளத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகளை சீரமைத்து தர வேண்டும் என்றும்,

மாற்றுத்திறனாளி ஒருவர் தனக்கு மாநகர எல்லையில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வலியுறுத்தியும் மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் மண்டல உதவி ஆணையாளர்கள் லெனின் ஐயப்பன் ஜஹாங்கிர் பாட்ஷா, பைஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify