Logo of Tirunelveli Today

கிருஷ்ணசுவாமி கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா

June 9, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி அம்பை ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணசுவாமி கோவிலில் கடந்த 3ஆம் தேதி வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.

தொடர்ந்து சுவாமி அம்பாள் அனுமன் வாகனம், சேஷ வாகனம் போன்ற வாகனங்களில் ஒவ்வொரு நாளும் எழுந்தருளிய அழகிய தரிசனத்தை பல பகுதியிலிருந்து வந்த மக்கள் பக்தியோடு கண்டுகளித்தனர்.

ஐந்தாம் நாளன்று கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மி நாராயண பெருமாள்,
தென் அழகர் ,அழகர் சுவாமி ,புருஷோத்தம பெருமாள், நவநீத கிருஷ்ண சாமி ,ஆகிய ஐந்து சுவாமிகளுகம் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி ஐந்து கருட சேவை நிகழ்ச்சிகள் என பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர் .

அந்தப் பெருமானின் அழகிய தரிசனம் தெய்வீக தரிசனமாக, சிந்தை குளிரும் தரிசனமாக ,தெவிட்டாத தரிசனமாக, செல்வகடாட்சத்தை வாரி வழங்கும் தரிசனமாக மக்களுக்கு தரிசனம் கொடுக்க… மக்கள் இரு கைகளையும் கூப்பி பக்தி பரவசத்தோடு கோவிந்தா என கோஷமிட்டு மெய்மறந்து தரிசனம் செய்தனர்.

யானை வாகனம் குதிரை வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள், வைகாசி விசாகத்தன்று தீர்த்தவாரி அபிஷேகங்கள் ,இரவில் சுவாமி அம்பாள் வீதி உலா என நடைபெறவிருக்கும் இந்தத் திருவிழாவிற்கு வரும் மக்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் வகையில் கோவில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடும் செய்துள்ளது.
.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify