தூத்துக்குடி மாவட்டம்., கோவில்பட்டியில் உள்ளது பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து ஏழு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் வரும் அன்று வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அன்று காலை 6.30 மணிக்கு மேல் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்று மஹா பூர்ணாஹுதியுடன் கூடிய தீபாராதனையும், அதனை தொடர்ந்து காலை 10.00 மணிக்கு மேல் கோவில் விமானங்களுக்கு புனித கலச நீரினால் அபிஷேகங்களும், பகல் 11.30 மணிக்கு மேல் திருக்கோவில் மூலவர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு 8.00 மணிக்கு மேல் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் கூடிய பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.