Logo of Tirunelveli Today

கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் மூலிகைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

July 16, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் கொக்கர குளத்தில் மூலிகைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  • மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை ஜூலை 16ஆம் தேதி நடைபெறுகிறது

இயற்கையாகக் கிடைக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட செடிகளைக் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் முறைதான் மூலிகை மருத்துவம் என்கிறோம். மனிதர்களுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய இந்த மூலிகை மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது இதனை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட அறிவியல் மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு;

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் மற்றும் உலகத் தமிழ் மருத்துவ கழகம் ஆகியவை இணைந்து மூலிகை முற்றம் 2.0 என்ற மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வை நடத்துகின்றது.

ஒவ்வொரு மாதமும் முதல் 3வது சனிக்கிழமைகளில் மாலை நாலரை மணிக்கு நடைபெற இருக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில், மஞ்சள் கரிசாலை மூலிகை பற்றிய கருத்து ஆய்வுகள் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்படுகிறது .

மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் பயன் தரும் வகையில் இலவசமாக மூலிகை கன்றுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9442994797 என்ற கைப்பேசி எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளவும் என செய்தி குறிப்பில் மாவட்ட அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

“உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாடுதனை அனைவரும் உணரும் வகையில் நடக்கின்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வு நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify