Logo of Tirunelveli Today

1008 Laddu decoration in Kokkarakkulam Mutharamman temple

August 16, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி நெல்லை கொக்கரகுளம் முத்தாரம்மன் சமேத குருசாமி கோவிலில் முத்தாரம்மனுக்கு 1008 லட்டு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இந்த தரிசன காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.

கடந்த 7ஆம் தேதி கொக்கரகுளம் முத்தாரம்மன் சமேத குருசாமி கோவிலில் முளைப்பாரி திருவிழா கோலாகலமாய் தொடங்கியது. மாலையில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு காண்பதற்கு கோவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

அன்று மாலை முளைப்பாரி எடுக்கும் விரத பக்தர்கள் கும்மி அடிக்கும் நிகழ்ச்சியும் ,அம்பாளுக்கு அபிஷேக அலங்கார ‌ தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று முளைப்பாரி விழா சிறப்பாக நடந்தேறியது. காலை 9 மணிக்கு அம்பாளுக்கு மிக அழகாய் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பெண்கள் முளைப்பாரியுடன் ஊர் சுற்றி வந்தனர். இரவு ஏழு மணிக்கு அம்பாளுக்கு 1008 லட்டு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தாள். ,அம்பாளின் சப்பர வீதி உலா அனைத்தும் மிக சிறப்பாக நடைபெற்றது .

இந்த நிகழ்வில் தென்மண்டல கட்டளை ஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், தருமை ஆதீனம், நிர்வாகிகள் சிவ. மகாலிங்கம் லக்ஷ்மணன் மற்றும் விழா குழுவினர் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவின் சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify