Logo of Tirunelveli Today

மண வாழ்வு அருளும் கல்யாண காத்யாயினி அம்மன் கோவில்

July 21, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

குன்றத்தூர் சென்னை குன்றத்தூர் கல்யாண காத்யாயினி அம்மன் கோவில், திருமணம் வெகு நாட்களாக ஆகாது வருந்துவோர் அனைவருக்கும் மண வாழ்க்கை உடனே அமைந்து திருமணம் கைகூடும் அருமையான ஸ்தலமாகும்

அதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்;

குன்றத்தூர் கல்யாண காத்யாயினி அம்மனை நன்றாக வேண்டி கொள்ளுங்கள். வாழ்க்கையில் மங்களகரமான காரியத்திற்கு நாம் தேங்காயை பயன்படுத்துவோம். இந்த மங்கள காரியத்திற்கும் மிகவும் முக்கியமானது தேங்காய். மஞ்சள் பூசிய தேங்காய் எடுத்துக்கொள்ளவும். விரலி மஞ்சள் கட்டிய தாலி கயிற்றை குடுமியில் சுற்றவும். சந்தனம் குங்குமம் மூன்று இடங்களில் வைத்து சிவப்பு பொட்டு இடவும்.

மஞ்சள் நிற மலர்ச்சரம் மல்லிகை சரம் என ஒரு வெள்ளி அல்லது பித்தளை தட்டில் வையுங்கள் . மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். இஷ்ட தெய்வம் குலதெய்வங்களை நினைத்து 48 நாட்கள் பூஜை அறையில் விளக்கேற்றி தினமும் பூஜை செய்து வந்தால் நல்ல இடத்தில் திருமணம் உறுதியாகும்.

நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் காத்யாயினி அம்மன் கோவிலுக்கு மணி தட்டு, மஞ்சள் ஆரத்தி கலச சொம்பு என பூஜை பொருட்களை நம் விருப்பப்படி வாங்கித் தரலாம் . முகூர்த்த தேங்காயை உடையாமல் பத்திரமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள கோவில் குளத்து தீர்த்தத்தில் விட வேண்டும் .

வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் சென்னை குன்றத்தூர் கல்யாண காத்யாயினி அம்மன் கோவிலில் மஞ்சள் தேங்காய் பூஜை செய்யும் விவரங்கள் கேட்டறிந்து அதன்படி முறையாக வழிபாடு செய்தால், எவ்வித தோஷங்கள் இருந்தாலும் நீங்கி திருமணம் விரைவாக நடந்தேறும் .

பதினாறு செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு குன்றத்தூர் காத்யாயினி அம்மன் திருத்தலத்திற்கு சென்று வாருங்கள். வாழ்வினை அனைத்து வளங்களும் பெற்று சிறப்பை காணுங்கள்.

இந்த வார விரத தினங்கள்
21- 7- 2022 வியாழன்கிழமை முதல் 28-7- 2022 வியாழன்கிழமை வரை

23-7- 2022 சனிக்கிழமை - ஆடி கிருத்திகை

26-7-2022 செவ்வாய்க்கிழமை- பிரதோஷம்,மாத சிவராத்திரி

28- 7- 2022 வியாழக்கிழமை- ஆடி அமாவாசை

ஆடி மாதம் அம்மனுக்கு சிறப்பான மாதம். இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் அபிஷேகம் ஆராதனை என்று சிறப்பான மாதமாக மேள தாளத்துடன் நம்முடைய காதுகளுக்கு பக்தி கலந்த சப்தநாதங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் அருமையான மாதம் ஆகும்.

அதுபோலவே இந்த மாதத்தில் இந்த வாரம் வரக்கூடிய ஆடி கிருத்திகை, பிரதோஷம் ,மாத சிவராத்திரி, ஆடி அமாவாசை அனைத்தும் தெய்வத்தின் மேல் பக்தியோடு வணங்கி விரதம் இருந்து தெய்வத்தின் அருளை பெறக்கூடிய நாட்கள் என்பதால் அனைவரும் முன்கூட்டியே இந்த சுப நாட்களை அறிந்து வழிபடும் முறைகளை அறிந்து , அதன்படி வழிபட்டு தெய்வத்தின் அருள் பெற்று வாழ்கையில் வளம் காணுங்கள்.

இந்த விரதத்தின் முறையான வழிபடும் முறைகளைப் பற்றி இந்த வாரம் முழுவதும் நாம் நிறைய பார்க்கவிருக்கின்றோம்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify