Logo of Tirunelveli Today

கடையத்தில் செல்லம்மாள் பாரதி மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

January 20, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தென்காசி மாவட்டம்., கடையத்தில் சேவலாயா சார்பாக பாரதியார் நூலக கட்டிடத்தில் அமைக்கப்படவுள்ள செல்லம்மாள் - பாரதி மையத்துக்கு நேற்று சபாநாயகர் திரு. அப்பாவு அவர்கள் அடிக்கல் நாட்டினார். பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் சொந்த ஊரான கடையத்தில் சில காலம் பாரதியார் தங்கியிருந்து, வில்வவனநாதர் - நித்யகல்யாணி அம்மன் கோவில் முன்புள்ள பாறையில் அமர்ந்து "காணி நிலம் வேண்டும் பராசக்தி" என்ற பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது. பாரதியார் தனது மனைவியுடன் இங்கு வாழ்ந்த காலத்தில் அவரது மனைவி தோள் மீது கைப்போட்டு நடந்து செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம். இப்போது அதே ஊரில் செல்லம்மாளின் தோள் மீது பாரதியார் கைபோட்டபடி நிற்கும் சிலையும் புதிதாக அமையவுள்ள மையத்தில் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்ட நிலையில், பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி அவர்கள் இணையவழியில் சிறப்புரை ஆற்றினார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify