Logo of Tirunelveli Today

கடன் தவணையை வசூலிப்பதில் கெடுபிடி கூடாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை!

June 11, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று பல்வேறு நுண்நிதி கடன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் வங்கிகளின் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்களின் அவசர காரணங்களுக்காக பல்வேறு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கிய பொது மக்களிடம், அதற்குரிய மாதாந்திர தவணைத்தொகை மற்றும் வட்டித்தொகை வசூலிப்பத்தில் அதிக கெடுபிடியாக நடந்து கொள்ளும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் அவர் கொரோனா ஊரடங்கால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார பாதிப்பை கருத்தில் கொண்டு வங்கிகள், நிதி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் எந்தவித கட்டாய வசூலிலும் ஈடுபடக்கூடாது. கடன் வாங்கியவர்களின் வீடுகளுக்கு சென்று கடனை கேட்டு வற்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இனிவரும் காலங்களில் இதுதொடர்பாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நிதி நிறுவனங்கள், வங்கிகள் பொதுமக்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை 0462-2500302 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியினை cms.nbfcochennai@rbi.org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், https://cms.rbi.org.in என்ற இணையதளத்திலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரியப்படுத்தலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் கூறியுள்ளார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify