Logo of Tirunelveli Today

நெல்லை திருமுருகன் திருச்சபை திருமண மண்டபத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம்

September 15, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் செப்டம்பர் 21-ஆம் தேதி திருமுருகன் திருச்சபை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
  • காலையில் நல அலுவலகர்கள் மக்களிடம் கோரிக்கை மனு பெறுவது, பிற்பகலில் கிராமங்களில் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் அரியநாயகி புரத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம், திருமுருகன் திருச்சபை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. காலையில் கோரிக்கை மனுக்களும் பிற்பகலில் கிராமங்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் நல அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.

வடக்கு அரியநாயகிபுரம் பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகிய வருவாய் கிராமங்களில் ஊராட்சி ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் 12- 10- 2022 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி வடக்கு அரியநாயகிபுரம் பகுதி ஒன்றில் உள்ள திருமுருகன் திருச்சபை திருமண மண்டபத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் 21- 9 2022 ஆம் தேதி நடைபெற்றது.

காலை 11 மணி முதல் மதியம்1 மணி வரை நடைபெற இருக்கும் இந்த முகாமில் சார் ஆட்சியர், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கொண்ட குழுவினர் கோரிக்கை மனுக்களை மக்களிடம் இருந்து பெறுவதற்கு உள்ளனர். கோரிக்கை மனுவை பெற்ற பின்னர் அந்தந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளது . இதற்காக மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்டம் நிர்வாகத்தின் செய்திக்குறிப்பு மக்களுக்கு தெரிவித்துள்ளது.

Image source: dailydhanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify