Logo of Tirunelveli Today

ஜூன் 18 தமிழக ஆளுனர் சுற்றுப்பயணம். அதிகாரிகள் முன்னேற்பாட்டு நடவடிக்கை

June 17, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி சுருக்கம் :

  • நெல்லை கடையம் பகுதியில் சனிக்கிழமை ஜூன் 18 ஆம் தேதி தமிழக ஆளுநர் சுற்றுப் பயணம்
  • பாதுகாப்பு கருதி அதிகாரிகள் வியாழக்கிழமை அன்று ஆளுநர் செல்லும் இடங்களில் ஆய்வு

ஒரு பணி செவ்வனே நடக்க வேண்டும் எனில் அதற்கான முன்னேற்பாடுகள் மிகவும் அவசியம் என்பதை மையப்படுத்தும் வகையில்…

கடையம் பகுதியில் சனிக்கிழமை ஜூன் 18 தமிழக ஆளுநர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதனையொட்டி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆளுநர் செல்லும் இடங்களை ஆய்வு செய்தனர் .

கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தப்பேரியில் வசித்து வரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீதரின் இல்லத்திற்கு தமிழக ஆளுநர் ஆர் .என். ரவி சனிக்கிழமை வர உள்ளார் . மேலும் அருகே உள்ள ராஜாங்கபுரம் கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடவிருக்கிறார்.

அதற்கான முன்னேற்பாடாக ஆளுநர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கும் பகுதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணி மற்றும் சுகாதார பணிகளை தென்காசி கோட்டாட்சியர், வட்டாட்சியர் அருணாச்சலம் , ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகைய்யா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

ஆய்வின்போது ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி தலைவர்கள் கோவிந்தப்பேரி, டி.கே பாண்டியன் , காவல்துறை தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் , காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், தலைமை காவலர் ரவி , மந்தியூர் கல்யாணசுந்தரம், , கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திருமலைக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify