Logo of Tirunelveli Today

ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்

June 11, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக் குறிப்புகள்:

  • ஜூன் மாதம் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது
  • இதையொட்டி நெல்லையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

குழந்தைகள் மலரும் மொட்டுக்கள், வருங்கால தூண்கள் ,நாட்டை முன்னேற்ற துடிக்கும் இளந்தளிர்களாய் உருவாக்க வேண்டும் என்பதில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது .

குழந்தைகள் சிறுவயதில் தொழிலாளர்களாய் உருவாகி. குழந்தைகளின் எதிர்காலம் வீணாக கூடாது என்பதை கருத்தில் கொள்ளும் விதமாக குழந்தைகள் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் என்று வருடா வருடம் ஜூன் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.

கலெக்டர் அலுவலகத்தில் விஷ்ணு அவர்கள் தலைமை தாங்கி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்

சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமாரதாஸ் தொழிலாளர் துறை துணை ஆணையர் (அமலாக்கம்) பிரசன்னா, மாயாவதி ஆய்வாளர்கள் நளினி சத்யபிரகாஷ் விஸ்வநாதன், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்ட இயக்குனர் சந்திரகுமார் பணியாளர்கள் ராஜேஸ்வரி , சேதுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள் உறுதிமொழியை சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமார் தாஸ் தலைமையில் அனைவரும் ஏற்றனர். நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழியை உதவி ஆணையாளர் சொர்ணலதா தலைமையில் அனைத்து ஊழியர்களும் ஏற்றனர்.

குழந்தை தொழிலாளி எனும் சொல் மறைந்து அனைத்து குழந்தைகளும் கல்வி எனும் ஒளி பெற்று முன்னேற்றப்பாதையில் நடக்கும் வகையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம். சிந்தை மகிழ்வோம். செயல் பூர்த்தியான நிறைவு காண்போம்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify