Logo of Tirunelveli Today

உடன்குடி பகுதியில் கருப்பட்டி உற்பத்தி பணிகள் மும்முரம்!

February 9, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடியில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டி உலகளவில் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு ஆண்டு தோறும் தை மாதம் துவங்கி ஆடி மாதம் வரை பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கப்பட்டு, கருப்பட்டி உற்பத்தி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெறும். இந்த ஆண்டு உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிகளில் நல்ல மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், பதநீர் உற்பத்தியும் பெருகியுள்ளது. இதனால் தற்போது முன்னதாகவே பதநீர் இறக்கும் பணியும், கருப்பட்டி உற்பத்தி செய்யும் பணியும் உடன்குடியில் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கருப்பட்டி உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் என்பதாலும், பொதுமக்களிடமும் அதன் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாலும் வரும்காலங்களில் கருப்பட்டியின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2026 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify