தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் தமிழக-கேரள எல்லையில் உள்ள புளியரை சோதனைச்சாவடியில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் இருந்து தினமும் பணி நிமித்தமாகவும், வியாபார ரீதியாகவும் பொதுமக்கள் பலர் கேரளாவுக்கு சென்று வரும் நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பொதுமக்களை கேரள எல்லையான கோட்டைவாசல் பகுதியில் கேரள சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து உரிய ஆவணங்களை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கிறார்கள்.
அதுபோல தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனைச்சாவடியில் தமிழக சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து வருபவர்களை தற்போது நடைமுறையில் உள்ள 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றுகள், உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கிறார்கள்.