Logo of Tirunelveli Today

நரிக்குடியில் விவசாய பணிகள் தீவிரம்! கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை!

January 24, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்
இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அரசு சார்பாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், பாப்பான்குளம், நல்லுகுறிச்சி, வேலங்குடி, இருஞ்சிறை, உலக்குடி, பனைக்குடி, நாலூர், வேளானேரி, எஸ். வல்லகுளம் ஆகிய பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவு பிறப்பித்த நிலையில் வேலங்குடி, நாலூர், இருஞ்சிறை, உள்பட பல்வேறு இடங்களில் இதுவரை அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது வயலில் விளைந்த நெல்லை விற்பனை செய்ய மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், மேற்கண்ட இடங்களிலும் விரைவாக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify