Logo of Tirunelveli Today

தூய்மை பணியாளர் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு!

March 14, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள்.
  • 15/03/2022 அன்று தூய்மை பணியாளர் தேசிய ஆணையக்குழு தலைவர் ஆய்வு.

திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய வரும் 15/03/2022 அன்று புதுடெல்லி தூய்மை பணியாளர் தேசிய ஆணையக்குழுவின் தலைவர் திரு.வெங்கடேசன் அவர்கள் திருநெல்வேலிக்கு வருகிறார்.

அன்று காலை 10.00 மணிக்கு அம்பாசமுத்திரம் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கும் திரு. வெங்கடேசன் அவர்கள் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாலை 3.00 மணிக்கு நடைபெற உள்ள குறைகேட்பு கூட்டத்திலும் கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்த கூட்டத்தில் தூய்மை பணியாளர் நலச்சங்க பிரதிநிதிகள், தூய்மை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு இவர்களது கோரிக்கை மற்றும் கருத்துக்களை வழங்கலாம் என திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image source: Facebook.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify