Logo of Tirunelveli Today

அரசு அருங்காட்சியகத்தில் கல்வெட்டு பயிற்சி என காப்பாற்சியர் அறிவிப்பு

July 12, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை 30, 31 தேதிகளில் குறுகிய கால கல்வெட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
  • திருநெல்வேலி வட்டார மக்களுக்கு தொல்லியல் சார்ந்த ஆர்வத்தினை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படுவதாக அருங்காட்சி காப்பாட்சியர் அறிவிப்பு.

திருநெல்வேலி மாவட்டம் மக்களுக்கு‌ பழங்கால தொல்பொருள் சின்னங்கள் மறக்காமல் தொடர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மிகச் சிறப்பாக எடுத்து வருகின்றது. இதனை மையப்படுத்தும் விதமாக

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சார்ந்த ஆர்வத்தினை மேம்படுத்தும் வகையில் கல்வெட்டினை வாசிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இந்த பயிற்சி நடக்கின்றது. குறுகிய கால தொடர்பான பழங்கால எழுத்துக்கள் குறித்த கற்றல் பயிற்சியும் சேர்த்து அளிப்பதற்கு நேரடியாக பயிற்சி கொடுக்கப்பட உள்ளது.

இதற்கான தொடக்க விழா திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை 30 சனிக்கிழமை மற்றும் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணிக்கு முழு நேரமாக நடத்தப்பட உள்ளதால் கல்லூரி மாணவ மாணவியர் , வரலாற்று ஆர்வலர்கள், ஆய்வு மாணவர்கள் , பொதுமக்கள் என விருப்பமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்

பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளவர்கள் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள் என அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவாணி குறிப்பிட்டுள்ளார்.

பங்கேற்க விருப்பம்‌ இருந்தால் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்வதற்கு திருநெல்வேலி eஅரசு அருங்காட்சியகத்தில் நேரிலோ அல்லது 7502433751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .

மிகவும் தொல்பொருள் நுணுக்கமான இந்த அறிவுக் கலையை அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்று கற்றுக்கொள்ள முன் வர வேண்டும். கற்று நம்முடைய பழங்கால சிறப்புகள் மேலும் வளம் பெற்று நம் நாட்டிற்கு சிறப்பை தேடி தர வேண்டும் என திருநெல்வேலி டுடே சார்பாக மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify