- வல்லநாடு கோவிலில் சூரிய ஒளி விழும் நிகழ்வு.
- திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
திருநெல்வேலி அருகே உள்ளது பழம்பெருமை வாய்ந்த வல்லநாடு சிவகாமியம்மை உடனுறை திருமூலநாதர் திருக்கோவில்.
இந்த கோவிலில் வருடத்தில் ஆறு நாட்கள் (மார்ச்-21,22,23 மற்றும் செப்டம்பர்-21,22,23) கருவறையில் உள்ள திருமூலநாதர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இவ்வருடம் 22/03/2002 நேற்று காலை 6.19 மணிக்கு மேல் சூரிய ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள திருமூலநாதர் லிங்கத்திருமேனியின் மீது விழுந்து முழுவதும் பொன்னிறமாக ஜொலித்தது. இதனைக் கண்ட பக்தர்கள் பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.
Image source: Facebook.com