Logo of Tirunelveli Today

நெல்லை அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்க விழா

August 10, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
  • மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு அவர்களால் 20 அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி ராதாபுரம் தொகுதி கூடங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 20 அரசு பள்ளிகளுக்கு தொழில் நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, அதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது ‌. விழாவினை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது . விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார். அப்பொழுது தெரிவித்ததாவது;

தமிழகத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அனைத்து பள்ளிகளிலும் அமைக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த வருடம் இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டுவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதை நிறைவேற்றும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தமிழக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனை.

ராதாபுரம் அரசு ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என 97 அரசு பள்ளிகள் மொத்தம் இருக்கின்றது . அனைத்து பள்ளிகளுக்கும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திதியில் இருந்து ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த நேரத்தில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்து அமுல் படுத்தியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அப்பாவு அவர்கள் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வி. எஸ்.ஆர் ஜெகதீஷ் ,தாசில்தார் ஏசுநாதன், திட்ட இயக்குனர் பழனி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மேலும் பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify