Logo of Tirunelveli Today

நீதிமன்ற வளாகத்தில் உதவி மையம் திறப்பு விழா

September 15, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை அன்று இரண்டு உதவி மையங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
  • மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு இந்த உதவி மையங்களை திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை உதவி மைய திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மையங்களை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு அவர்கள் திறந்து வைத்தார்.

நீதித்துறையில் இதுவரை நடந்துவந்த முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு உதவும் வகையில் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இரண்டு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து பதிவுகளும் மின்னணு முறையில் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மையங்களையும் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு அவர்கள் தொடங்கிவைத்து முன்னிலை வகித்தார். இந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற நீதிபதி ஷமீனா, நீதிபதிகள் செந்தில் முரளி, இசக்கியப்பன் ,அமிர்தவேலு மற்றும் சங்கத் தலைவர் ராஜேந்திரன், உதவி தலைவர் சீதா , செயலர் காமராஜ் ,உதவிச் செயலர் பரமசிவன்,வழக்கறிஞர்கள் பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify