செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் முழுவதும் கொளுத்தும் வெயில்.
- தாமிரபரணி, நம்பியாறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு மக்கள் படையெடுப்பு.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை காலமான தற்போது கடுமையாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் வெக்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள நீர்நிலைகளை தேடி படையெடுத்து வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளாக கருதப்படும் அகத்தியர் அருவி, காரையார், சேர்வலாறு, பாபநாசம், அம்பாசமுத்திரம் தாமிரபரணி படித்துறை, திருப்புடைமருதூர் தாமிரபரணி படித்துறை, முக்கூடல் சங்கமம், மணிமுத்தாறு அருவி, சுத்தமல்லி அணைக்கட்டு, களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பியாறு, நாங்குநேரி பெரியகுளம், மருதூர் அணைக்கட்டு, முறப்பநாடு தாமிரபரணி, கருங்குளம் தாமிரபரணி, திருவைகுண்டம் அணைக்கட்டு உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் குளிப்பதற்காக காலை மற்றும் மாலை வேளையில் குவிந்து வருகிறார்கள்.
வார இறுதி விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் நீர்நிலைகளுக்கு சென்று குளித்தும், உணவுகள் சமைத்து ஒன்றாக உண்டும் கோடை காலத்தை கழித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Image source: Facebook.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.