Logo of Tirunelveli Today

தென்காசி வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறை பாதுகாப்பு!

February 21, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை (22/02/2022) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கடையநல்லூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் விஸ்டம் மெட்ரிக் பள்ளியிலும், புளியங்குடி நகராட்சி, ராயகிரி, சிவகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய பேரூராட்சிகளின் வாக்குகள் புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், சங்கரன்கோவில் நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சியில் பதிவான வாக்குகள், சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளியிலும், செங்கோட்டை நகராட்சி, அச்சன்புதூர், குற்றாலம், இலஞ்சி, மேலகரம், பண்பொழி, எஸ்.புதூர், வடகரை கீழ்பிடாகை ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தென்காசி, சுரண்டை நகராட்சிகள், ஆய்க்குடி, சாம்பவர்வடகரை பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் தென்காசி ஐ.சி.ஐ. அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும், ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி, கீழப்பாவூர், சுந்தரபாண்டியபுரம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவாக வாக்குகள் அத்தியூத்து சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும் வைத்து எண்ணப்படுகின்றன. இதனை அடுத்து மேற்கண்ட ஆறு வாக்கு எண்ணும் மையங்களுக்கும் மூன்று அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Image Source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify