Logo of Tirunelveli Today

ரூ 6 கோடி மதிப்பில் 150 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள்

August 25, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை 24 கிராம பஞ்சாயத்துகளிலும் மக்களுக்காக உடற்பயிற்சி கூடம் அமைத்த கொடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • ரூ 6 கோடி மதிப்பில் 150 உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் என மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பி .எஸ். ஆர் ஜெகதீஷ் அறிவிப்பு.

திருநெல்வேலி மாவட்டம் ஆறு கோடி ரூபாய் மதிப்பில் 150 உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் என மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பி எஸ் ஆர் ஜெகதீஷ் தெரிவித்துள்ளார் .

நெல்லை மாவட்டத்தில் நேற்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ். ஆர் ஜெகதீஷ் தலைமை தாங்கி கூட்டத்தில் உரையாற்றினார் . அப்பொழுது அவர் பேசியதாவது ;

நாட்டின் மது போதை அதிலிருந்து மக்கள் சீரழிவதை தடுப்பதற்கும், மக்களுக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 24 கிராம பஞ்சாயத்துகளிலும் மக்களுக்காக உடற்பயிற்சி கூடம் அமைத்த கொடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

இதற்கான தொடக்கமாக 150 உடற்பயிற்சி கூடங்கள் ரூ 6கோடி மதிப்பில் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நெல்லையில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் விரைவாக ஸ்மார்ட் பகுப்பதை தொடங்கவும் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்று வி.எஸ் ஆர் ஜெகதீஷ் கூறினார்.

துணைத் தலைவர் செல்வ லக்ஷ்மி அமிதாப், செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கவுன்சிலர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.

Image source: dailydhanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify