Logo of Tirunelveli Today

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் திருக்கோவில் சிறப்பு

July 19, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

மேற்கு திசை நோக்கி காட்சி தரும் சுயம்புவாய் சிவபெருமான். இருட்டுக்கு ஒலி கொடுப்பவனாய் இருண்ட வாழ்க்கைக்கு விளக்கு ஏற்றுபவனாய் உள்ளத்தில் நிறைவாய் குடி கொண்டவனாய் எம் பெருமான் எவ்வளவு அழகாக உயர்ந்து நிற்கின்றான்!

கந்தபுரி , வேதபுரி , அங்காராபுரி என பல பெயர்களில் அழைக்கப்படும் திருத்தலம். இறைவன் சகலமுமாய் காட்சி தரும் திருத்தலம். விநாயகப் பெருமான், தையல் நாயகி , வைத்தீஸ்வரன் கோவில், முத்துக்குமார சுவாமி, அங்காரகன் எழுந்தருளி நாற் புறமும் தலம் , மூர்த்தி , தீர்த்தம் என‌புகழ்பெற்ற பெற்ற திருத்தலம்.‌ ஆறு கால பூஜை எப்பொழுதும் நடைபெறும் அற்புதமான திருத்தலம்.தேவாரப் பாடல்களில் அய்யனின் புகழ் பாடப்பட்ட திருத்தலம் .

ஜடாயு மோட்சம்‌ பெற்ற திருத்தலம். ராவணன் சீதா தேவியை கடத்திப் போகையில் தடுப்பதற்கு முற்பட்ட ஜடாயுவின் சிறகொடிந்து இந்த ஸ்தலத்திலே கீழே விழ.... ராமர் ஜடாயுவை சகோதரனாய் ஏற்று ஈம சடங்கு செய்து, தன் கடமைதனை நல்லவிதமாய் செய்து முடித்த திருத்தலம். அந்த ஜடாயு குண்டத்தில் பெறப்படும் விபூதி தனை , சித்தாமிர்த தீர்த்தக் குளநீரினில் குழைத்து முத்துக்குமாரசுவாமி இடத்தில் உள்ள குழி அம்மியில் அரைத்து, தையல்நாயகி பாதத்தில் வைத்து ஸ்லோக‌ ‍ பூஜைகள் செய்யப்பட்டு சிறு உருண்டைகளாக பிரசாதம் செய்யப்படுகிறது.

அவ்வாறு பூஜையில் இருந்து பெறப்படும் மருந்துமாகிய சிறு உருண்டைகளை மனதார வேண்டி உட்கொண்டால் தீராத நோய்களையும் சேர்த்து வைப்பான் மெய்யன் அவன்.

அங்கே குடின கொண்டிருக்கும் செவ்வாய் பகவானுக்கு அர்ச்சனை செய்தால் , தோஷங்கள் அனைத்தும் விலகி பரிபூரணமான அருள் கிடைக்கும் . திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நடக்கும்.

புள்ளிருக்கு வேலூர் என்று அழைக்கப்படும் அந்த தெய்வீக திருத்தலத்திற்கு அனைவரும் சென்று வணங்கி வழிபட்டு வாழ்க்கையில் அனைத்து வளங்களும் காண்போம்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify