Logo of Tirunelveli Today

தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது!

January 31, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கு நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த மாதம் செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியாகியது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மருத்துவப்படிப்பு கலந்தாய்வு சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்காசி மாவட்டத்தில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ள மாணவிகள் பட்டியல்:

மாணவி லோகேஸ்வரி - திருச்சி மருத்துவக்கல்லூரி,
மாணவி சுபஸ்ரீ - ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி,
மாணவி ஐஸ்வர்யா - அரியலூர் மருத்துவக்கல்லூரி,
மாணவி பாத்திமா சைனியா - மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி,
மாணவி சவுதா அப்ரைன் - தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி,
மாணவி சீதாதேவி - வடக்கன்குளம் ராஜா பல் மருத்துவக்கல்லூரி,
மாணவி ரேவதி - விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி,
மாணவி சங்கீதா - விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி,
மாணவி மாலினி - திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி,
மாணவி ஐஸ்வர்யா - சென்னை அரசு மருத்துவக்கல்லூரி,
மாணவி முர்ஷிதா பானு - கரூர் அரசு மருத்துவக்கல்லூரி,
மாணவி சித்ராதேவி - கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify