Logo of Tirunelveli Today

பிள்ளையார் சதுர்த்திக்கான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

August 22, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

நெல்லை மாவட்டம் விநாயகர் சதுர்த்தி தின விழாவை ஒட்டி விநாயகர் சிலைகள் அதிவேகமாக தயாரிக்கும் பணியில் நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31- 8 -2022 புதன்கிழமை நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தி அன்று பெரிய விநாயகர் சிலைகள் சாலைகளில் பிரதிஷ்டை செய்வது வருடா வருடம் சிறப்பாக நடைபெறுகிறது. அதன் பின்பு விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைப்பது வழக்கமாக நடந்து வருகிறது. இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது

நெல்லையில் இந்த வருடம் இந்து அமைப்புகள் மற்றும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது .

பாளையங்கோட்டை , சமாதானபுரம் கிருபா நகர், சீவலப்பேரி சாலை, மார்க்கெட் பகுதிகள் போன்ற இடங்களில் இரவு பகலாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விரைவாக நடந்தேறி வருகின்றது .

ஒரு அடி உயரம் முதல் 9 அடி வரை உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு அவை அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் குறைந்த பட்சம் 100 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 27 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. பொதுவழிபாட்டிற்காக பலர் போன மாதமே முன்பதிவு செய்துள்ளனர் .

சிவன், பார்வதி , விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்கள், வண்ணத்தில் மிக அழகாக வடிவமைத்து, பார்ப்பதற்கு பக்தர்களை கவரும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
.
இங்கு செய்யப்படும் விநாயகர் சிலைகள் கேரளா மற்றும் திருச்சி , மதுரை , தென்காசி தூத்துக்குடி , திண்டுக்கல் ,கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify